குற்றம்

தேநீர்க்கடை, பிரியாணிக்கடையில் தாக்குதல் - திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது

Veeramani

சென்னையில் தேநீர்க் கடையையும் பிரியாணிக் கடையையும் தாக்கியதாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் தினேஷ், சுகுமார் ஆகியோர், அங்குள்ள தேநீர்க் கடை மற்றும் பிரியாணிக் கடையில் மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. கடைக்காரர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமுற்ற அவர்கள் இருவரும், கடையிலிருந்த பொருள்களை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர்.



அந்தக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சிகளுடன், கடையின் உரிமையாளர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ், சுகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.