குற்றம்

சென்னை: உணவக கழிவறையில் செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்த நபர் கைது

Veeramani

சென்னை கிண்டியில் உள்ள தனியார் உணவக கழிவறையில் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த அட்டை பெட்டியை சோதனையிட்டுள்ளார். அதில் செல்போன் ஒன்றில் வீடியோ பதிவாகிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த செல்போன் உணவகத்தில் பணியாற்றும் நபருடையது என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.