குற்றம்

சென்னை: மது போதையில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த வாலிபர் கைது 

Veeramani

சென்னை போருர் அருகே அய்யப்பந்தாங்களில் மது போதையில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரில் கணேசன் என்ற வாலிபரை கைது செய்த போருர் காவல் துறையினர் மது போதையில் உடைத்தாரா அல்லது திட்டமிட்டு உடைத்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.