நெல்லை தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாலந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டியன். நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உதயம் என்ற பெயரில் பார் மற்றும் பைனான்ஸ் தொழில்கள் செய்து வந்தார். சென்னையிலும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த அவர், அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்று வருவார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் நாலந்துலாவுக்கு சென்ற அவர். வீட்டில் இருந்துள்ளார். அவர் குடும்பத்தினர் நேற்று வெளியே சென்றிருந்தனர். அப்போது தனியாக இருந்த, ’உதயம்’ துரைபாண்டியன் திடீரென துப்பாக்கியால் தனது வலது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சென்னையில் பைனான்ஸ் தொழிலில் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் தீவர விசாரணைக்கு பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சந்திப்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.