குற்றம்

மளிகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு; பெட்ரோல் குண்டுவீச்சு: வீடியோ

webteam

மதுரையில் மளிகைக் கடை உரிமையாளர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

மதுரை அனுப்பானடி சின்னக் கண்மாய் பகுதியைச் சேர்ந்த கணேசன், மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடைக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அதில் ஒரு இளைஞர், கடைக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.