குற்றம்

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்: கையும் களவுமாக பிடிபட்டார்

Rasus

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல்ஆய்வாளர் தமிழ்மாறன் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்மாறன், திருவாம்பூர் கோவிந்தராஜ் என்பவரிடம் அடிதடி வழக்கு போடாமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், 20‌ ஆயிரம் மட்டும் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளரிடம் வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களமாக காவல் ஆய்வாளரை கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய போது ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டதை ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கூடி பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.