குற்றம்

சொத்து பிரச்னையில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டணை!

kaleelrahman

சொத்து பிரச்னையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டணை வழங்கி மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மூலவயல் கிராமத்தைச் சேர்ந்த தந்தை சோலைமலைக்கும், மகன் பழனிக்கும் இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்திரமடைந்த மகன், தந்தை சோலைமலையை அடித்து படுகொலை செய்துள்ளார். இந்த வழக்கு திருவானை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் இன்று, தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் பழனிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியதோடு அபராதத் தொகை கட்டத் தவறினால் கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டணை அளிக்கவும் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.