குற்றம்

விழுப்புரம்: அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; ஓட்டுநரும் கைது

Sinekadhara

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஏற்கெனவே நடத்துநர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்ற அரசுப் பேருந்தில், விழுப்புரத்தில் இருந்து கோனூர்க்கு 20 வயதான இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லாததால் தனியாக அமர்ந்திருந்த அந்த இளம்பெண்ணுக்கு பேருந்து நடத்துநர் சிலம்பரசன் (32) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் காணை போலீசார், நடத்துநர் சிலம்பரசனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநர் அன்புச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார்.