குற்றம்

நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

kaleelrahman

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுனரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைவ் சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உடன் பிறந்தோர் மொத்தம் 11பேர் உள்ளனர். செந்திலின் தம்பி ரகு என்பவர் மீது அடிதடி, கொலை என இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ரகு கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவரின் அண்ணனை வெட்டி படுகொலை செய்தார். அதனை தொடர்ந்து பழிவாங்க துடித்த பிரபாகரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2017ஆம் ஆண்டு ரகுவின் அண்ணனும் தேமுதிக-வின் கழக பேச்சாளருமான சரவணனை வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செந்திலின் தந்தை இறந்த நிலையில் அவரது காரியத்திற்காக நேற்று நள்ளிரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து ஏழு பேருக்கும் மேற்பட்ட மர்மக் கும்பல் செந்திலின் தாய் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அச்சுறுத்தி பட்டாக் கத்தியுடன் அனைவரையும் தாக்கினர்.

இதில், ரகு தப்பித்து ஓடிவிட்ட நிலையில், அவரது அண்ணன் செந்திலை அந்த கும்பல் வெட்டிக் கொன்ற்து. மர்மக் கும்பல் தாக்கியதில் செந்திலின் சகோதரிகள், மனைவி மற்றும் மருமகன் என நால்வர் காயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவ குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆ.சுதாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களும், தடவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.