குற்றம்

ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மணப்பெண் மேக்கப்புக்கு அழைத்து கொடூரம்!

ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மணப்பெண் மேக்கப்புக்கு அழைத்து கொடூரம்!

webteam

மணப்பெண்ணுக்கு மேக்கப் போட அழைத்து, ஓடும் காரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

லூதியானாவைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி, திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு மேக்கப் போடும் வேலை செய்து வந்துள்ளார். இதற்கான அழகு கலை நிலையத்தில் பணியாற்றியுள்ளார். கடந்த 5-ம் தேதி அவர்களுக்குத் தெரிந்த பெண் ஒருவர், சிறுமியை தேடி வந்துள்ளார். வீட்டில் யாருமில்லை. மணப்பெண் ஒருவருக்கு மேக்கப் போட அழைத்தார். நம்பிச் சென்றார் சிறுமி. 

அப்போது காரில் அந்தப் பெண்ணுடன் ஜலந்தரை சேர்ந்த பல்விந்தர் சிங், குல்வந்த் சிங் மற்றும் லூதியானாவைச் சேர்ந்த ஜாசி, ஹர்தீப் சிங் ஆகியோர் இருந்தனர். கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் ஓடும் காரிலேயே அவர்கள் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஜலந்தரின் ஒரு பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றனர். 

போகும்போது, ‘இந்த சம்பவம் பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது. சொன்னால் கொன்று விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். முதலில் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்த சிறுமி பின்னர் வீட்டில் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.