குற்றம்

பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - போக்சோவில் கைது

webteam

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த நாவரசு என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து நாவரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சவம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.