குற்றம்

அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளநீர் வியாபாரி போக்சோவில் கைது

webteam

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் இளநீர் வியாபாரி செல்வக்குமார். அதே பகுதியில் வாரியங்காவல் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.

அப்போது மாணவியை பின் தொடர்ந்த செல்வக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதையடுத்துர அவரிடமிருந்து தப்பித்து வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.