குற்றம்

அரியலூர்: திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது

kaleelrahman

அரியலூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டூவீலர் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டைவாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (26) டூவீலர் மெக்கானிக் வேலை செய்துவரும் இவர், வடகடல் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. சிறுமியை கர்ப்பமாக்கிய விக்னேஷ்வரன் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்.