குற்றம்

ஆந்திரா: புத்தகம், பேனா தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

Veeramani

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புத்தகம், பேனா தருவதாக ஆசைகாட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள மல்காபுரம் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம், அதே பகுதியை சேர்ந்த சின்னாராவ் என்பவர் புத்தகங்கள், எழுதுகோல்கள் தருவதாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரிந்தால், பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் சில மாணவிகள் அதை வெளியே கூறாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஒரு மாணவி, அந்த நபர் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியதை அடுத்து, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சின்னாராவின் வீட்டிற்குச் சென்ற அப்பகுதி மக்கள், அவரை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.