குற்றம்

மணல்கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்.. டிராக்டர் ஏற்றி கொலை செய்த கும்பல்.!

Veeramani

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சட்டவிரோத மணல்கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள், டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஆக்ராவில்  நடந்த சட்டவிரோத  மணல்கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் 2019 பேட்ஜை சேர்ந்த அலிகாரில் வசிக்கும் சோனு சவுத்ரி ஆவார். இன்று அதிகாலை 6 மணிக்கு இவர் ரோந்துக்கு சென்றபோது மணல் திருடிய கும்பல் டிராக்டருடன் தப்ப முயன்றுள்ளது. அதனைவிரட்டிப்பிடிக்க ஓடியபோது இவர்மீது டிராக்டரை ஏற்றியுள்ளனர்.

இந்த கொடூர கொலைக்குபிறகு அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.