குற்றம்

திருவள்ளூரில் 10 பெண்கள் மாயம் ! தேடுதலில் போலீஸார்

webteam

திருவள்ளூரில் கடந்த 2 நாட்களாக 8 பெண்கள் காணாமல்போன நிலையில் இன்று மேலும் 10 வயது சிறுமி உட்பட 4 பெண்கள் மாயமாகியுள்ளனர். இதனிடையே காணாமல்போன பெண்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த யுவராணி( 20)  என்ற பெண், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக வேங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படது. முகமது அலி தெருவில் பெரியப்பா வீட்டில் இருந்த அக்கா நதியா (21) , தங்கை மதுமிதா (10) என்ற‌ பெண்கள் காணாமல் போனார். இதுதொடர்பாக திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஈக்காடுகண்டிகை பகுதியில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி சென்ற ஹேம பிரியா (19) என்ற பெண்ணை காணவில்லை. இதுதொடர்பாக புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யாரேனும் இவர்களை கடத்திச் சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2 நாட்கள் முன் காணாமல்போன சிவரஞ்சனியையும், கலைவாணியையும் போலீசார் மீட்டுள்ளனர். சிவரஞ்சனியை கடத்தி சென்றது தொடர்பாக பிரதாப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு பகுதியில் செங்கல் சூளையில் கைது செய்யப்பட்ட பிரதாப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளவேடு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.