குற்றம்

பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் பணம் கொள்ளை: ரூ.2,90,500 களவு; காவல்துறை விசாரணை

JustinDurai

சென்னை பல்லாவரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திலும் நூதன முறையில் சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-களில் லட்சக்கணக்கான ரூபாய் களவு போனதை அடுத்து, பெருநகரம் முழுவதும் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தை சரிபார்க்குமாறு வங்கிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, பல்லாவரம் பழைய ட்ரங்க் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎமில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.