குற்றம்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய காவலர் - இளம்பெண் புகார்

JustinDurai
காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக காவலர் மீது புகார் கொடுத்துள்ளார் பெண் ஒருவர்.
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ஒரு பெண்ணிடம் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சதீஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக அந்த பெண் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவலர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவலர் சதீஷின் தந்தை சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.