குற்றம்

காதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்

webteam

திருச்சியில் காதலனை கொன்றுவிட்டு காதலியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் தமிழ்வாணன் (23) சமயபுரம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவரும், கொனலை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த பெண்ணும் சில வருடங்கலாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பொங்கல் தினமான நேற்று மாலை இருவரும் கொனலைப் பகுதியில் உள்ள மலைமாதா கோயில் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலை 6 மணியளவில் சொந்த ஊருக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது, குமூளூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசியுள்ளனர். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். சண்டையின்போது மர்ம நபர்களில் ஒருவன் தமிழ்வாணனின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான். படுகாயத்துடன் தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். பின்னர் அந்த நான்கு பேரும், அப்பெண்ணை வனப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கழுத்தில் கத்திக்குத்துடன் கிடைந்த தமிழ்மாணவன் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.