குற்றம்

தேனி: பெண்ணை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்ட போலி செய்தியாளர் கைது

JustinDurai
தேனி மாவட்டம் போடியில் பெண் ஒருவரை, ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் போலி செய்தியாளர்களான ராஜசேகர், அய்யர்சாமி, பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4ஆம் தேதி அய்யர்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவர் தலைமறைவாக இருந்தனர். அவர்களில் ராஜசேகரையும் இன்று காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். செய்தியாளர் என கூறிக்கொண்டு, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.