குற்றம்

கொலை மிரட்டல் கடிதம் - தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் புகார்

JustinDurai

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு தபால் மூலம் வந்த கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் சென்னை மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தங்கள் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்ததாகவும் அதில் விஎச்பி அமைப்பின் வேதாந்தம், பத்திரிகை நிர்வாகி ஆர்ஆர் கோபால்ஜி, ராமேஸ்வரத்தை சேர்ந்த விஎச்பி நிர்வாகி சரவணன் ஆகியோர் தங்கள் சில செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கொலை செய்யப்படுவார்கள் என கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவை சேர்ந்த எஸ்டிஐபி அமைப்பு சார்பாக அக்கடிதம் வந்திருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிக்கலாம்: "மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும்" - பாஜக தலைவர் அண்ணாமலை