குற்றம்

திருவையாறு: பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

kaleelrahman

திருவையாறு அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருவையாறை அடுத்துள்ள ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் திருவையாறில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அந்த சிறுமியுடன் பலமுறை நெருங்கி பழகியுள்ளான். இதையடுத்து அந்த சிறுமி பள்ளிக்கூடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சிறுமியை தஞ்சை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து பரிசோதித்த போது 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாய் திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைத்தனர்.