குற்றம்

உ.பி : பயிற்சி வகுப்பு முடித்து வீடு திரும்பிய 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

EllusamyKarthik

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி (Bareilly) பகுதியில் 13 வயது சிறுமி பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அங்கு இயங்கி வரும் மருந்தகம் ஒன்றில் அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் 17 வயதான சிறுவன். 

இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை நடைபெற்றுள்ளது. இந்த குற்றத்தை செய்த சிறுவன், அந்த சிறுமியை மருந்து கடைக்குள் வைத்து பூட்டி வன்கொடுமை செய்துள்ளான். 

வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தினால் அவரை தேடி அவரது தந்தை வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் மருந்து கடையில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது மருந்துக் கடையின் ஷட்டர் பூட்டப்பட்டு இருந்துள்ளது. ஆனாலும் அந்த கடையின் விளக்குகள் வாசலில் ஒளிர்ந்துக் கொண்டிருக்க, சந்தேகம் அடைந்த சிறுமியின் தந்தை, ஷட்டரை தட்டியுள்ளார். அப்போது அந்த 17 வயது சிறுவன் கடைக்குள் இருந்தபடி ஷட்டரை திறந்துள்ளான். 

கடைக்குள் தனது மகள் சுயநினைவின்றி, ஆடைகள் களைந்து இருப்பதை கவனித்துள்ளார் சிறுமியின் தந்தை. பின்னர் அங்கு வாக்குவாதம் நடந்துள்ளது. தொடர்ந்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுக்க அந்த 17 வயது சிறுவன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 328 மற்றும் 376, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். அந்த சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.