குற்றம்

திண்டுக்கல்: பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை வீதியில் வீசிய சோகம்

JustinDurai
திண்டுக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை வீதியில் வீசப்பட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரையில் தனியார் பள்ளி அருகேயுள்ள வீதியில், குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது, ஆண் குழந்தை துணியில் சுற்றி கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறினர். குழந்தை வீதியில் வீசப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.