குற்றம்

2020-21இல் 63; 2021-22இல் 109! தமிழகத்தில் இருமடங்காக உயர்ந்த லாக்கப் மரணங்கள்!

webteam

தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் லாக்கப் மரணங்கள் அதிகம் நிகழ்வதாக கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 2020 -21இல் 451 மரணங்களும், 2021 -22இல் 501 மரணங்களும் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 2020 - 21இல் 185 மரணங்களும், 2021 -22இல் 257 மரணங்களும் நேரிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், 2020 - 21இல் 63 மரணங்களும், 2021 -22இல் 109 மரணங்களும் ஏற்பட்டதாக அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.