குற்றம்

ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : பெண் பார்க்க சென்று திரும்பியவருக்கு அதிர்ச்சி..!

webteam

ஆரணி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொல்லிமேடு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சதானந்தம். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு தங்கராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகன் தங்கராஜுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

பின்னர், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 55 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கண்ணமங்கல போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.