குற்றம்

துணிக்கடையில் வேலைபார்த்தபடி போதை மாத்திரை, ஹெராயின் விற்பனை செய்தொர் கைது!

webteam

இலங்கை யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களையும், நான்கு போதை வியாபரிகளையும் கைது செய்துள்ளனர்.

யாழ்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள மூன்று ஜவுளிக்கடைகளில் வேலை செய்து கொண்டு, போதை மாத்திரைகள் மற்றும் ஹெராயின் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 1000 போதை மாத்திரை, 10 மில்லிகிராம் ஹெராயினை பறிமுதல் செய்து யாழ்ப்பான போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேல் அதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.