ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 36 ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் பிஎஸ்எப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்பிஎஸ் சந்து கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் 8 மாத குழந்தையை தாக்கிய செவிலித்தாய்: குஜராத்தில் அதிர்ச்சி