குற்றம்

குஜராத்: 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - சென்னை தம்பதி கைது

Veeramani

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஆஃப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கண்டெய்னர்களில் வருவாய் உளவுப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கண்டெய்னரில் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தம்பதியைக் கைது செய்த அதிகாரிகள், அவர்களுக்கு தலிபான்களுடன் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர்.