குற்றம்

”அந்த ஆசிரியரை தூக்கிலிடுங்கள்: ஆனால், சாதி பிரச்னையாக மாற்றாதீர்கள்” -விஷால்

sharpana

” பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். ஆனால், இப்பிரச்சனையை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள்” என்று கண்டனங்களை தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால்.

சமீபத்தில் சென்னை கே.கே நகரிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக, அப்பள்ளி மாணவிகள் பலரும் புகார் அளித்ததையொட்டி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த கொடூர சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“பிஸ்பிபி பள்ளி ஆசிரியரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. இப்பள்ளி மூடப்படவேண்டும் என்று உணர வைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனது நண்பர் அன்பில் மகேஷ் இப்பிரச்சனையில் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம், இதனை சாதி பிரச்சனையாக மக்கள் மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். இப்போதாவது, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இதை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.