கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 259 வாகனங்கள் பறிமுதல் - கொரோனா விதிகளை மீறியதாக காவல்துறை நடவடிக்கை

Sinekadhara

சென்னையில் கொரோனா விதிகளை மீறியதாக நேற்று ஒரேநாளில் 259 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் 12 காவல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியதாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, விதிகளை மீறியோரிடம் இருந்து 259 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.