கொரோனா வைரஸ்

விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை - வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிக்கை

Sinekadhara

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என பூங்கா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள் மற்றும் 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விலங்குகளுக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிவித்திருக்கிறது.