கொரோனா வைரஸ்

2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்துக - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

Sinekadhara

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ராஜேஷ் பூஷண் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தகுதியுள்ள மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சர்வதேச பயணத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வகுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.