கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

EllusamyKarthik

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 1,359 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரேநாளில் சிகிச்சை பலன் அளிக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,457 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தலைநகர் சென்னையில் 164 பேரும், கோவையில் 137 பேரும், ஈரோட்டில் 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.