கொரோனா வைரஸ்

தொடர்ந்து குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை : தமிழ்நாட்டில் இன்று 1039 பேருக்கு கொரோனா உறுதி

EllusamyKarthik

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1039 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 1,23,084 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்ததன் மூலம் இது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக 36-வது நாளாக கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 575 பேர் ஆண்கள், 464 பேர் பெண்கள். 

தற்போது 11,850 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 1,229 தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 41 வயதான நபர் ஒருவரும் அடக்கம். அவருக்கு ஹைப்போ தைராய்டிசம் உள்ளிட்ட இணை நோய்களுடன் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். 

சென்னையில் 126 பேரும், கோவையில் 118 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி,  திருப்பூரில் தலா 1.5% நபர்களுக்கு தொற்று உறுதி.