கொரோனா வைரஸ்

மேற்கு வங்கம்: நாளை முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி

EllusamyKarthik

மேற்கு வங்க மாநிலத்தில் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரை அரங்குகள் நாளை முதல் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரை அரங்குகள் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இருப்பினும் உள்ளூர் ரயில் சேவை மேற்கு வங்கத்தில் முடக்கப்பட்டுள்ளது. அதே போல இரவு நேர ஊரடங்கும் இரவு 9 முதல் காலை 5 மணி வரை அங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.