கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 1,600ஐ நெருங்கும் நிலையில் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாளை மறுநாள் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதிகம் பேர் பயன்பெறுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மிகுந்த கவனமுடன் செயல்பட்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.