கொரோனா வைரஸ்

கர்நாடகா டூ நீலகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி

கர்நாடகா டூ நீலகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி

sharpana

கர்நாடகாவிலிருந்து நீலகிரிக்கு பலர் சுற்றுலாவுக்கு வரும் நிலையில், எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கற்கநல்ல சோதனைச்சாவடியில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், இருமல் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.