கொரோனா வைரஸ்

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: கேரளாவில் திங்கள் முதல் இரவுநேர ஊரடங்கு

Sinekadhara

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து திங்கள் முதல் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திங்கள் கிழமை முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.