கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு!

EllusamyKarthik

கொரோனா மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல் செய்வதாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் முழுவதும் காவலர்கள் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.