கொரோனா வைரஸ்

நெல்லை: தடுப்பூசி போட்டுக்கொண்டால் டிவி, பிரிட்ஜ்: அறக்கட்டளை அறிவிப்பால் குவிந்த கூட்டம்

kaleelrahman

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டதால் பலர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அறக்கட்டளை சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டன. ஒரே முகாமில் மதியம் 1 மணி வரை 600-க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.