கொரோனா வைரஸ்

கருப்பு பூஞ்சை ஒரு நோய், தொற்று வியாதி அல்ல - மருத்துவ கல்வி இயக்குநர்

Sinekadhara

கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது பேசிய இயக்குநர், மூக்கு வழியாக கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. மூக்கு வழியாக கண்களை பாதித்து மூளையை தாக்கும். உடலில் நோய் தடுப்பாற்றல் குறையும்போது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. ஆனால், கருப்பு பூஞ்சை நோய், தொற்று வியாதி அல்ல என்று கூறினார்.