கொரோனா வைரஸ்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதி

நிவேதா ஜெகராஜா

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகோவுக்கு லேசான கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவமனை செல்ல வேண்டிய சூழலில்லை என சொல்லப்படுகிறது.

முன்னதாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருந்திருக்கிறார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அண்ணா நகர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் சில நாட்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.