கொரோனா வைரஸ்

கரூர்: மின்மயான ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள்

kaleelrahman

கரூரில் மின்மயான ஊழியர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அரிசி மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கரூர் மின்மயானத்தில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், பழங்கள், கையுறை, முகக் கவசங்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. கரூர் பாலம்மாபுரம் மின்மயானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டார்.