கொரோனா வைரஸ்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,594 பேருக்கு தொற்று உறுதி

JustinDurai

தமிழ்நாட்டில் ஒரேநாளில் மேலும் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 776 பேருக்கும், செங்கல்பட்டில் 146 பேருக்கும், கோவையில் 80 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 624 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 9,304 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் உயிரிழந்ததைத் தொடர்ந்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,790-ஆக அதிகரித்துள்ளது.