கொரோனா வைரஸ்

டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை: உலக சுகாதார நிறுவனம்

நிவேதா ஜெகராஜா

ஒமைக்ரான் திரிபு கொரோனா, டெல்டா திரிபைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில் உலக சுகாதார இயக்குநர் மைக்கெல் ரியான், "ஏற்கெனவே போடப்படும் தடுப்பூசிகள் ஒமைக்ரானை கட்டுப்படுத்தாது என்பதற்கான அறிகுறியும் இதுவரை இல்லை. முதற்கட்ட ஆய்வுகளின் முடிவில் இவை தெரியவந்துள்ளது. வைரஸ் உருமாறியிருக்கும் நிலையில், நாம் ஏற்கெனவே கடைபிடித்து வரும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை தொடர்வது அவசியம்” என்றுள்ளார்.

ஒமைக்ரான் வகை கொரோனா டெல்டாவை விட வீரியமிக்கது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஃபாசியும் உறுதிசெய்துள்ளார்.