கொரோனா வைரஸ்

ஒமைக்ரான் பரவல்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

JustinDurai

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில் தமிழ்நாட்டின் சார்பில், மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவப் படுக்கைகள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்துவது, நோய் கட்டுப்பாடு பகுதிகளை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் பற்றி கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.