டெல்லியில் கொரோனா தொற்று அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து அபாயச் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 8 - 12 மணி நேரம் வரை மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாகவும், எனவே ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.