கொரோனா வைரஸ்

சென்னை முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

Veeramani

சென்னை முழுவதும் உள்ள 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்களைத் தொடங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், 49 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் இதுவரை 25 லட்சத்து 14 ஆயிரம் பேர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாகவும், இது மக்கள் தொகையில் 30 விழுக்காடாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.