கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

Veeramani

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உத்தரவிட்டுள்ளார்.